எங்கள் வீட்டு கோழி.....வாங்கும் போது தெரியவில்லை... அது கோழியா சேவலா என்று... கைக்குள் அடங்கும் சைசில்... பொசு பொசுவென இன்னொசண்ட் கண்களுடன் வலம் வரும்...என் மகள் அப்போது வைத்த பெயர்...சித்து....
எங்கள் வீட்டுக்குள்ளும், மனசுக்குள்ளும் வளர்ந்தது... இன்று அதற்கு முரட்டு கால்கள்... கீறி விடும் நகங்கள்... என்றாலும்... இன்னும் எங்கள் வீட்டு செல்ல பிள்ளை... அடிக்கடி கம்யூனிக்கேட் செய்யும்... செய்ய முயற்சிக்கும்... முந்திரிக்கொட்டை போல் எல்லாவற்றிலும் முன் நிற்கும்... ஆனாலும் முந்திரி தானே சுவை... எங்கள் அனைவரின் மனங் கவர்ந்த ஜீவன்...
அது என்னவோ தெரியவில்லை... எங்கள் மகன் பெயரை... தன் பெயர் என தப்பாக நினைத்து இருக்கிறது... எப்போதெல்லாம் என் மகனை அழைக்கிறோமோ... அப்போதெல்லாம்.. சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகும்...